ஆசியக் கிண்ண ரி - 20 போட்டித் தொடரில் சுப்பர் 4 சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் பாகிஸ்தான் அணி ஐந்து விக்கெட்டுக்களால் இந்திய அணியை வெற்றிகொண்டுள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 181 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
இந்திய அணி சார்பாக அதிக ஓட்டங்களாக விராட் கோலி 60 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
பந்து வீச்சில் பாகிஸ்தான் அணியின் ஷதாப் கான் 31 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தார்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 19.5 ஓவர்கள் நிறைவில் வெற்றி இலக்கை அடைந்தது.
பாகிஸ்தான் அணி சார்பில் அதிக ஓட்டங்களாக மொஹமட் ரிஸ்வான் 71 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
Category: விளையாட்டு, புதிது
Tags: